Monday, March 30, 2009

நீ...

முதல் முதல் வந்த உணர்வு
உன்னில் மூழ்க வைத்தது
உன் நினைவுகள் ஏனோ என்னை
எனையே மறக்க வைத்தது

ஒரு கனவில் எங்கோ என்னை
கைபிடித்து சென்றது- எங்கு
செல்கிறோம் என்றேன்.
நானம் இதழில் சிரித்தது...

விழிகள் பேசிய மௌனம்
இதயம் புரிந்தது-சில
நொடிகள் வானில் பறந்து
பறவை ஆனது

மூச்சுக் காற்றில் காதல்
கீதம் இசைத்தது- மோகம்
பாஷை ஆக முடிவை
மறந்தது ...

காதல் செய்த மாயம்
கண்ணில் தெரிந்தது
கனவுகளை எதிர் பார்த்து
உள்ளம் தவத்தில் கிடந்தது

நீ முதல் முதல் வந்த உணர்வு....

No comments:

Post a Comment