உன்னில் மூழ்க வைத்தது
உன் நினைவுகள் ஏனோ என்னை
எனையே மறக்க வைத்தது
ஒரு கனவில் எங்கோ என்னை
கைபிடித்து சென்றது- எங்கு
செல்கிறோம் என்றேன்.
நானம் இதழில் சிரித்தது...
விழிகள் பேசிய மௌனம்
இதயம் புரிந்தது-சில
நொடிகள் வானில் பறந்து
பறவை ஆனது
மூச்சுக் காற்றில் காதல்
கீதம் இசைத்தது- மோகம்
பாஷை ஆக முடிவை
மறந்தது ...
காதல் செய்த மாயம்
கண்ணில் தெரிந்தது
கனவுகளை எதிர் பார்த்து
உள்ளம் தவத்தில் கிடந்தது
நீ முதல் முதல் வந்த உணர்வு....
No comments:
Post a Comment