Saturday, March 14, 2009

இலக்கை தேடி...

வயது 44.
வாழ்க்கையின்
எதிர்பார்த்த அரைபாதி
எப்படியோ
கழிந்த பெருமூச்சு.

உடல் வளர்ந்தாலும்
மனம் வளராத மந்த நிலை..

கற்க கசடற...
வள்ளுவம் சொன்ன
இரண்டு வரி தத்துவம்
புரிந்தால்
கற்றவை கற்றபின்
நடந்தால்
நன்மை உண்மை

யாரால் இயலும்?
ஒவ்வொரு நொடியும்
தவம் செய்யும்
நிலை வேண்டும்...

மனிதம்
சாதாரணம் அல்ல...
அன்றாட விலங்கினமாய்
அவதி!

சூழ்நிலை சூறாவளி
சூன்ய வாழ்க்கை
சோக மயானத்தில்
சுடலை போல்
தனியே செல்லும்
பிறப்பின் தாகம்

பித்தம் பிணக்கு
பிரிவினை கணக்கு
வருமான வரிகளால்
வாழ்க்கையின் இலக்கு

அன்பை தொலைத்து
அறிவை அழுக வைத்து
ஆசை சொப்பனங்களுடன்

எங்கே செல்கிறேன்?
எங்கே செல்கிறேன்?

No comments:

Post a Comment