நீயின்றி நெஞ்சம்
தவிக்கிற தம்மா - உன்
நினைவுகள் என்னை
வாட்டுதே அம்மா
நெஞ்சம் நெகிழ்கிற
வாழ்க்கைதான் அம்மா- என்
கண்ணீர் துடைத்திட
நீயில்லை அம்மா
காலத்தின் கோலம்
பிரித்ததே அம்மா-நீ
ஒருவார்த்தை சொல்லாது
சென்றதேன் அம்மா
வாங்கிய வரங்கள் வேதனை அம்மா - உன்னை
பிரிந்த பின் ஆயிரம்
சோதனை அம்மா
அவை கேட்டிட நீயும் அருகிலை அம்மா
உன்னை போல்
எனையும் பார்த்திட ஒருத்தி
வந்ததால் போனாயோ
என் அன்பம்மா
தாயின்றி வாடும்
சேஎனை பார்க்க
எங்ஙனம் உன்னால்
இயல்கிற தம்மா?
ஓரளவேனும் உள்ளம்
மனிதம் கற்றது
உன்அன்பே உயர்
பண்பே அம்மா
உனைப் பிரிந்திருக்கும்
இத்தவிப்பொரு கொடுமை
உனைப்போல் தாய்
இருப்பது நினைவில்
உலகில் வாழ்ந்திட
உதவிடும் நன்மை.
நீயில்லை என்றிடல்
தவறென உணர்ந்தேன்
நினைவும் செயலும்
நீஎன் றறிந்தேன்
தாயே போற்றி! தாயே போற்றி!
No comments:
Post a Comment