Friday, March 13, 2009

சக்தி கொடு

நிழல் போலே இச் சோகம்
நெருடித்தான் வருகிறது
நிஜத் தீயின் வெப்ப நா
நீசத்தில் எரிக்கிறது

கனவாலே உருவாகி
காலமது செல்கிறது
காற்றாகும் நாள் வருமுன்
வெல்வேனா
சக்தியே சொல்!

கசை கொண்டு அடித்துஎனை
திசைநேர் நீ கொண்டுசெல்
களைபோலே வாழும் எனை
முளையருத்து தளையாக்கு

அம்மா நீ பெற்ற மகன்
அறிவிலியாய் வாழ்ந்திடலா?
அறிவின்றி அழிந்திடல் மேல்
அகம் திற அறிவு திற...
அருள் தருவாய் அன்னையே!

No comments:

Post a Comment