நெருடித்தான் வருகிறது
நிஜத் தீயின் வெப்ப நா
நீசத்தில் எரிக்கிறது
கனவாலே உருவாகி
காலமது செல்கிறது
காற்றாகும் நாள் வருமுன்
வெல்வேனா
சக்தியே சொல்!
கசை கொண்டு அடித்துஎனை
திசைநேர் நீ கொண்டுசெல்
களைபோலே வாழும் எனை
முளையருத்து தளையாக்கு
அம்மா நீ பெற்ற மகன்
அறிவிலியாய் வாழ்ந்திடலா?
அறிவின்றி அழிந்திடல் மேல்
அகம் திற அறிவு திற...
அருள் தருவாய் அன்னையே!
No comments:
Post a Comment