Thursday, March 12, 2009

என் சன்னலின் வழியே...

சொல்லத் தெரியாமல்
வந்து நின்ற காற்றை
சுவாசம் வரவேற்றது!

வானம் கண்களின் இமைகளானது...

நான் இயந்திர உலகின்
இந்திரன் ஆனேன்

நிதர்சனம்
சகிக்க முடியாத நிர்வாணம்

பொய்களின் போர்வையில்
புனிதம் பேசும் புது மனிதர்கள்..
மனிதன் மனிதன்தான்!
மற்ற விலங்கினச் சாயல்!
மாற்றவா இயலும்?

சுற்றி சுற்றி
வந்து நின்ற காற்று
சுவாசம் நிர்பந்த வரவேற்பு!

நேயம் ஒரு நியதி...
புணர்ச்சியின் புனிதம்.
மோகமுத்தங்கள்
பரிணாம தொடர்ச்சியாய்
பரிமானம் ஆனது!

உள்ளும் வெளியும்
ஒரு போராட்டம்!

மனிதன் மனிதன்தான்....


No comments:

Post a Comment