Thursday, February 17, 2011

நான் என்ற குறும்படம்....

கேள்வி போல்
வளைந்த வாழ்க்கை...
பதில் தெரியாமல்!

எண்ணும் எழுத்தும்
கண்ணை மறைத்தன.

மனித ஜீவியாய்
ஒரு மாயம்....

என் சித்திரம் சிரித்தது.
கண்ணாடியாய்
என்னையே
எதிரில் கண்டேன்.

என்றோ சொன்ன
எதிர்கால வாக்காய்
என் சோதிடத்தை
எழுதிய என்னை

வெற்றிடம் நிரப்பிய
காற்றாய்
கிரகித்தேன்.

முக்காலமும்
உணர்ந்தேன்...
என் மூச்சின்
முகவரியில்.

நாடகங்கள் மேடையில்
மட்டுமல்ல
ஒவ்வொரு
நொடியும் நடிக்கும்
நான்

ஒத்திகை இல்லாமல்
ஒரு உலகம் படைத்தேன்

என் வாழ்க்கை
என்ற குறும்படம்
யாரும் காணாத
படச்சுருளாய்


கல்லறைப் பெட்டியில்...

Saturday, February 12, 2011

விழித்த போது விடியல்...

இரவு நேரம்...
வெளியே வீசிய பனிமழை...
வீட்டிற்குள் வீசிய அமைதி...
ஓடிக் கொண்டிருந்த டீவீ....
அலறித் தவித்த
தொலைபேசி...
முகம் பார்த்த உறவுகள்
முனகிய உயிர்...

என் மாலை நேரம்
ஏனோதானோ என்று...

ஒரு உலக நியதியில்
அன்றாடமானது.

எதிரே தெரிந்த
உருவங்கள்
கண்கள் பார்த்த எடைகளில்
வாழ்க்கையானது.

இங்கிருந்த இதயம்
எங்கோ நின்றிருக்க
கனவும் நிஜமும்
வெவ்வேறு பரிமாணங்களாய்

ஒவ்வொரு திசைகளில்
ஓடிய நானும்
ஒடாத நானுமாய்...

தத்துவம் மட்டுமே வாழ்க்கையல்ல!

கண்கள் திறந்தேன்.
விழித்த போது விடியல்!