பல கோடி உயிர்கள்....
பரந்த பூமி
பேசியும் பேசாமலும்
ஜீவராசிகள்!
மனிதன் மட்டும்
மகத்துவம் பெற்றான்
மனிதனின் மத்தியில்.
புனிதம் என்ற பெயரில்
வரைந்த வரைகோடு.
புண்ணியம் என்ற பெயரில்
புணைந்த பூச்சுக்கள்...
புற்கள்,
செடிகள்,
கொடிகள்
மரங்கள்
விலங்குகள் என்றும்
அணுவினும் சிறிய
நுண்ணுயிரிகள் என்றும்
படைப்பின் சிறப்பு,
உன்னதம் என்று
இருப்பதை அறிந்திட
எடுத்த முயற்சியில்
அறிந்ததைச் சொல்லி
தெரிந்தவன் ஞானியா?
இகம் பரம் என்று
தம்மை அறிந்திட
தவம் பல புரிந்து
காவியில் காலம்
கழிப்பவன் ஞானியா?
படைப்பின் வட்டத்தில்
பயிற்சி செய்திடும்
பண்பாடு கொண்டு
அன்றாடம் பார்க்கும்
அவனவன் ஞானியா?
ஒருமுறை கொடுத்த
ஓருயிர் கணக்கில்
சுகம்பல வேண்டும்
சுதந்திரன் ஞானியா?
வினோத உலகின்
விந்தைகள் பார்த்து
வியக்கா உள்ளம்
வித்தகன் ஞானியா?
வந்தவன் போகிறான்
வெந்தவன் ஆகிறான்
உற்றவை கற்றவை
உதறிச் செல்கிறான்
வரவு செலவு
செய்பவன் யாரோ?
வாழ்க்கைக் கணக்கை
புரிந்தவன் யாரோ?
தெரிந்தும் பயணம்
புரிந்தும் இன்னும்
கொலைகளும் கொள்ளையும்
புரிவதும் ஏனோ?
சொத்தும் சுகமும்
மனித வாழ்க்கையா?
அன்பும் உறவும்
மனித வாழ்க்கையா?
ஒருவனை கொன்று
ஒருவன் வாழ்ந்திட
செய்யும் கொலைகள்
மனித வாழ்க்கையா?
மனிதன் என்பது
விலங்குகள் போலே
மனிதன் தனக்கே
வைத்த பெயர்...
ஆயிரம் ஞானியர்
இருந்தும் உலகில்
போரும் பகையும்
வளர்வது ஏன்?
அரசியல் பாசறை
சூசகம் வளர்ச்சி
ஆயிரம் வார்த்தைகள்
வளர்ப்பது ஏன்?
பொருளாதாரம் என்ற பெயரினை
மனிதன் மாற்றிட வேண்டும்
மனிதாதாரம் என்ன என்பதை
மனிதன் உணர்ந்திட வேண்டும்
விலங்குகள் போலே வாழும் மனிதன்
வீழ்ந்திடத்தானே வேண்டும்...
விதிகளை மாற்றி சதிகளை விட்டு
புதியவனாகிடல் வேண்டும்...
இறைவன் உள்ளான் என்று சொல்லி
தர்மம் என்றும் புண்ணியம் என்றும்
பொழுதை போக்கும் ஒரு கூட்டம்
நாட்டை காக்கிறோம் உலகம் காக்கிறோம்
என்று உளறி போரில் மாய்க்கும்
இன்னொரு கூட்டம்
ஒருவன் கண்டது ஒருவன் கொண்டது
சுயநல வாழ்க்கை விலங்கினச் சேர்கை
இயற்க்கை விதிகள் கலாச்சாரம்
மனித விதிகளும் மாயைப் போர்வையும்
யார் செய்தார்?
இல்லை எது செய்தது?
காணாக் கடவுளைக் கேட்கின்றேன்...மனம்
திறந்து உனை தேடுகிறேன்..
மனிதம் என்றொரு வார்த்தை மட்டும்
மனிதம் ஆகிடல் ஆகாது
மனிதன் கடவுளின் மறுபுறம் என்றால்
கட உள் மனம் கொஞ்சம் மனிதா...
மறுபுறம் கடவுள் உள்ளார் -அவர்
கட உள் என்றே சொன்னார்....
கடவுள் கட உள்.....