Monday, December 14, 2009

காற்று...

நீ
எங்கிருந்து வந்தாய்?
என் மூச்சாகினாய்?

தென்றல் சுகம் என்பது
உன்னால்தான் தெரியும்...
சுமைகளும் வெறும் பஞ்சாகும்
உன்னால்தான் தெரியும்...

இருண்டு கவிழ்ந்திருந்தேன்
நீ விளக்கானாய்..
இல்லாத எல்லைகளில்
ஒரு இலக்கானாய்...

தூரங்கள் அருகினிலே
நான் உன் அரவணைப்பில்
கண்ணயர்ந்தேன்....

கனவுகள் கலையும்
என்ற உண்மை நீயானாய்...

வலிகளை சுமந்தவனாய்
வழிதனை மறந்து நின்றேன்...
நினைவினில் கலந்த உன்னை
நீக்கிடத்தான் இயலுமோடி?

என்னை கேட்கிறேன்
என்னிடம் சொல்கிறேன்...
என்னில் எல்லாமும்
நீயானாய்....

கண்ணில் வழிகின்ற
கண்ணீர் கானல் இல்லை...
உன்னை சுமந்த உள்ளம்
சுரந்த வேர்வையடி...

எங்கிருந்தோ வந்தாய்
எனைத் திருடிச் சென்றாய்...
காற்றின் விசையினிலே
பரந்த சிறுதுரும்பாய்
காணாமல் போனேனே...
என் கண்ணில் விழுந்தேனே

உன்னை முகர்ந்ததனால்...
என்னை மறந்தேனே....
எங்கிருந்து வந்தாய்
நீ என் மூச்சாகினாய்?

No comments:

Post a Comment