Tuesday, December 29, 2009

வழித்துணை...

அன்பெனும் உணர்வு அகம் பெருக்கெடுக்க
அறிவும் அகந்தையும் அடுத்தது மடுக்க
பண்புகள் நல்லவை நலம் உளம்சேர்க்க
வின்எலை அளவிலா வித்தகம் கற்றேன்

மட்புகழ் பொட்புகழ் மதிசெரி கற்ப்புகழ்
மனிதச் சிறுவிலே மாறிடும் உறுப்புகள்
மக்கிடும் சிக்கலில் மிக்கொரு நித்தனாய்
மாய்த்தனை சிற்ப்புகழ் மாக்களில் எத்தனாய்
மிக்கிய சேர்வினை மீதலில் வாழ்ந்தவா
மேன்மைசேர் திருவினை அன்பிலே உறைந்தவா!

எப்பெரு சக்தியின் முப்பரிமாணமாய்
எத்தகு நிலையும் அன்பினில் உய்த்திட
வித்தகு செவ்வினை சீரிய உளமே
வீசு நல் வீரியம் அன்பே!

சொக்கிடும் சுகந்தமே சோர்வறு வசந்தமே
சூழப் பறந்திடும் சுதந்திரப் புறாவே
வாழ நல்வழி மேல்நின்று சொன்ன
வழித்துணை விழித்துணை யாவுமாய் உற்ற
வாஞ்சையும் அன்பும் வழித்தடம் ஆகுமே....

No comments:

Post a Comment