Saturday, January 23, 2010

எண்ணக்குமிழ்

எண்ணக்குமிழ் ஒன்று
எனக்குள் எழுந்தது...
என்னை விட்டுவிட்டு
எங்கோ திரிந்தது

கனவின் சுதந்திரமாய்
காற்றில் பறந்தது...
அருவமாய் உணர்விற்கு
பாலம் அமைத்தது

உலகின் பரப்பையெல்லாம்
நொடியில் கடந்தது
உன்னைக் கண்டது
பிம்பமாய் பிரதியாக்கி
உள்ளச் சுவர்களிலே
ஓவியமாக்கியது

சாத்திரம் கோத்திரம்
சாதகம் மறந்தது
சூத்திரம் சூசகம்
யாவும் இல்லாமல்
அன்பில் ஒளிர்ந்த
ஒளிவட்டமாய்

இதய வானில்
இதமாய் பறந்தது
என்னில் பிறந்தது
எங்கோ கலந்தது

காதல் காற்று போல்
கண்ணிற்கு தெரிவதில்லை
காதலே காற்றாகி
சுவாசிப்பேன் தெரிவதில்லை

எண்ணக் குமிழ் ஒன்று....

No comments:

Post a Comment