இதயத்தில் சுவடுகள்
எத்தனையோ ஆணிகள்
நினைவுப் படங்களை
நெஞ்சினுள் அரைந்திருக்கும்....
ஒவ்வொரு இதயமும்
ஒரு மௌன வானமாய்
நினைவுப் பறவைகளை
தன் சொந்த வானில்
பறக்க வைக்கும்
ஆம் ... தன் வானில் மட்டும்தான்!
மெல்லிய உணர்வுகளின்
ரகசியக் காப்பறையாய்
சொல்லாத முகவரிகள்
ஒவ்வொரு உயிரையும்
எங்கோ கூட்டிச் செல்லும்
பாதைகள் தேடி
பரிதவிக்கும்
பிறப்பின் ரகசியங்கள்
பறக்கும் உயிர்ப்பறவை...
பாதை தேடித் தேடி
கூசும் வழித்தடமும்
வழுக்கும் அடிகளுமாய்...
வாழ்க்கை...
மனதிடம் கேட்கிறேன்!
என் கையை கொஞ்சம் பிடித்துக் கொள்வாயா?