Tuesday, September 7, 2010

உறவு...

ஒரு நொடி
இருந்து
மறு நொடி
மறக்கும்
ஒரு பொம்மலாட்டம்!

ஒரு நூலிழையின்
மீதாடும்
உணர்வுகளின் பாரம்.

கனவுப் பாலங்களின்
காலற்ற தோற்றம்...

அன்பை யாசிக்கும்
மனதின் வாட்டம்...

அறியாமல் செல்வது
போல் செல்லும்
அறியாமை வாட்டும்...

எதிர்பார்க்கும் வட்டத்தின்
இடையினில் தோற்றம்

சொல்லாமல் சுயத்தின்
சாயங்கள் மாற்றம்...

புரியாத புதிர் போல்
வாழ்க்கை ஓட்டம்

புரிகின்ற தருணத்தில்
அந்திமம் காட்டும்


எதிரே தெரியும்
சிவப்பு விளக்கின்
அடையாளம் போல்

வாழ்வின் வழியினில்
சோகங்கள் சுமந்த
இதயம்
பெறும் பிரியாவிடையாய்...

உறவென்றிருந்த
உயிரின் பயணம்
எனக்குள் முடிந்ததா?

அடுத்த காட்சிக்கு

அனுமதி பெற்றதா?

உறவு எதுவரை?
உறவு யாருடன்?
உறவு என்ன?