நாட்கள் ஓடும்
வாழ்க்கை ஓடும்
இதயம் என்ற
ஏடு மட்டும்
நினைவுக் காற்றில்
பக்கம் புரட்டும்....
அன்பு கலந்த
பக்கங்களின்
அருமை நாட்கள்
புதிய படங்களாய்
பளிச்சிடும்....
யாராய் எப்படியும்
எங்கே இருந்தாலும்
உணர்வின் நரம்புகளில்
இதமாய்
நல்ல உறவுகளின்
உன்னதம்
உரம் சேர்க்கும்....
வாழ்க்கை கடலில்
மூழ்கிய பின்னர்
நீச்சல் தெரியுமா
என்று கேட்ட
விதியின் முன்னால்
வீரப்போர் புரிந்த
புனிதர் போலே
நம்மில் எத்தனை பேர்?
வெற்றி இலக்கில்
எத்த்னை பயணங்கள்!
எங்கு செல்கிறோம்?
சுற்றிச் சூழும்
சூறாவளியில்
பயணத்தின் பாதைகள்
காற்றில் புரண்ட
வாழ்க்கைப் புத்தகத்தின்
ஏதோ ஒர் பக்கத்தில்
எழுதிய கவிகளில்
அன்பினால் சுரந்த
நட்பை நினைத்து
இத்தருணத்தில்...
மறுபடி பிறக்கிறேன்
நலமா நண்பா?
No comments:
Post a Comment