ஏதாவது உளரும்
தனக்குத் தானே
அறை கூவும்
எண்ணத்தின் வேகத்தில்
இதம் காணும்.
நிஜம்
சட்டென்று விழுந்த
முட்டுக்கட்டையாய்
கற்பனை கோட்டையை
தகர்க்கும்
இதயம் பரிதவிக்கும்
இயக்கம் நடுங்கும்
எல்லாம் மாயை
என்ற சிந்தனை
கோடி ஏற்றும்
வேதனையே வாழ்க்கை
என்ற வேதம்
நினைவில் வரும்
கற்பனையில் மறுபடியும்
சுகம் நெருடும்
மறுபடியும்
நிஜம் நெருடும்....
மறுபடியும் மறுபடியும்....
No comments:
Post a Comment