Wednesday, April 29, 2009

கொஞ்சம் அழுது கொள்கிறேன்...

ஒவ்வொரு மனமும் எப்போதாவது
அனாதையாகும்...
தனக்குத் தானே தவித்துக் கொள்ளும்.
உறவுகள் ஆயிரம் இருந்தும்
துறவறம் பூண்டிருக்கும்

ஏக்க சிறையினில் தன்னை
தானே அடைத்துக்கொள்ளும்
வினோத வலைக்குள் சிக்கிய
மீனாய் பரிதவிக்கும்

காலத்தின் கண்ணாடியில்
வழுகிச் செல்லும்
வாழ்க்கை பயணத்தில்
தனிமை கொண்டு
அமைதி இழக்கும்...

வளர்ந்தும் மனதில்
குழந்தையைப் போலே
வாடி நிற்கும்...

வானம் பார்த்து
இமைக்காது
கற்பனை சிறகுகளில்
அபிநயம் பார்க்கும்...

தன் உணர்வுகளையது
சொல்லத் தவிக்கும்
அன்பு தேடும்

மறைந்து ஒளிந்து
மாயை கவலைக்குள்
மறுதலிக்கும்

மனம் என்ற மாயை
நம்மை மறுபடி மறுபடி
எங்கெங்கோ கூட்டி செல்லும்.

வழி தெரியாமல்
வாழ்க்கை காட்டில்
ஏனோ தெரியவில்லை
தன்னை தானே
அனாதையாக்கும்

ஏன் என்ற கேள்விக்கு
விடை தெரியாமல்
விடுகதையாக்கும்...

No comments:

Post a Comment