உயிரின் ஓலங்கள் ...
கண்ணீர் சுட்ட கன்னங்கள்
கருவிழி வட்டங்கள்
செந்நீர் சிந்திய
சகோதரர்கள்....
இலங்கை எரிய
எத்தனை ராவணர்கள்?
கேட்டது தவறா?
சிந்தியுங்கள்...
சுதந்திரம்
எமது பிறப்புரிமை
என்ற மொழி தவறா?
உணர்வு தவறா?
நீங்கள் சற்றே
எம்மிடத்தில்
இருந்து பாருங்கள்...
உயிரை விட்டு
உருக்குலைந்து
சின்னா பின்னமாய்
உறவுகளை தொலைத்துப்
பாருங்கள்...
உங்கள் வீட்டு
சன்னல்கள்
ஏன்
மூடப்பட்டே உள்ளன...
வெளியே வேகும்
தமிழன் சடலங்கள்
திரைத்துளியும்,
பாடல் நாடகங்கள்
பார்க்கும்
தொலைகாட்சி
சுகங்களாகவா போய் விட்டன?
உங்கள் சுவாசத்தில்
கவலையின் பயமில்லை
உறவுகள் இறக்கும்
சோகம் இல்லை
எட்டாத தூரத்தில்
தமிழன் என்று சொல்லி
தொடாத உறவுகளின்
அந்நியமாய்
வாழ்க்கையின் வரலாற்றில்
வாழும் களைகளாய்
வாழ்ந்த பொய்களின்
நிஜச் சாயல்களாய்...
தமிழா என்று நான் அழைக்கலாமா?
No comments:
Post a Comment