கண்களில் வண்ணமானாய்!
உன்
நினைவுகள்
படபடக்கும்
நெஞ்சில்
ஒரு சுகம்
எப்படியோ
முளைத்த சிறகுகள்
எங்கேயோ பறக்க வைக்கும்
காதல்
பூக்களாய்
நெஞ்சில் சோலையாகும்
மனதின் வீதிகளில்
சுற்றி சுற்றி
உனையே எண்ணும்
உணர்வின் சுகந்தமாய்
உன் விழிப் பார்வைகளை
மலர் என்று கண்டு
தேன் உண்ணும் வண்டு போல்
தெரியாத தூரங்கள்
திகட்டாத தேன்
சுற்றி சுற்றிவரும்
ஒரு
காதல் பட்டாம் பூச்சி.....
No comments:
Post a Comment