Sunday, July 25, 2010

நிஜம் என்ற நடிப்பு...


நிகழ்வு!

வேண்டியபடி இருக்கும்
தருணம்.

மகிழ்வு.....

மனித மனம்...
மனநிலைகள்...
மறுபடி மறுபடி
தன் சுகம்...

எண்ணங்கள்
நிறைவேறாத
எதிர்மறை

எதிரி போல்...
ஒரு உண்மை
உதாசீனப் படுத்தப்படும்.

இது என் இயல்பு
என்ற உண்மை

மனம் உணரும்.
மனநிலை உணராத
ஒரு
அந்தரச் சுகத்தின்
அகராதி போல்

நான்...
நிஜம்...
நடிப்பு....
இயக்கம்...
இந்த வாழ்வு!

ஒரு முறை
உண்மை பேசு!

உண்மையை
உணர்ந்து....
உன்னையும்
உணர்ந்து!

நிஜம் என்பது நடிப்புதான்....
வாழ்க்கை என்பது நடப்புதான்!

1 comment:

  1. நண்பர் திரு. யோகி ராமானந்த குரு அவர்களுக்கு,

    உங்களின் வருகைக்கும் வார்த்தைக்கும் நன்றி. உங்கள் வாழ்க்கை குறித்து ஓரளவு படித்தேன். உங்கள் முயற்சி வெற்றியடைய என் அன்பு வாழ்த்துக்கள். சமுதாயம் என்ற அமைப்பின் அடிப்படை உணர்வுகளில் வித்தியாசமான சிந்தனை, நடப்பில் மாற்றம் வந்தால் அன்றி மேம்பாடு என்ற ஒரு பார்வைக்கு அர்த்தம் இல்லை. மாதிரிச் சமுதாயம் ஒன்றை உருவாக்குதல் மிக்க நன்று. தொடர்பில் இருப்போம். வாழ்த்துக்களுடன்....

    முகில்

    ReplyDelete