Friday, July 16, 2010

முனிவன்!


விழியின் சாளரங்கள்
திறந்தாய்...

உன் பார்வையில்
நான் வீழ்ந்தேன்!

உன்னையறியாமல்
ஒரு பிம்பமாய்
உன் விழித்திரையில்!

நீ
இமை மூடிய
பொழுதுகளில்
என்னைச் சிறையிட்டாய்

இமைச் சிறகுகளால்
வீசி
வசியம் செய்தாய்

என் கவிதையின்
எழுத்துக்களாய்
எனக்குள்
எழுதிய
என் காதல் புத்தகத்தின்
அத்தியாயங்கள்
உன் முகவுரையே....

படித்து முடிக்காத
பக்கங்களாய்
என்னுள்

ஒவ்வொரு வினாடியும்
இதயத்தில்
பிரசவித்தாய்

நான் முதன்முறை
முக்காலமும்
உணர்ந்தேன்!

ஒரு காதல் முனிவனாய்....


-முகில்

(பட உதவி: BostonHerald)

1 comment:

  1. நல்லா இருக்குங்க...காதல் முனி

    ReplyDelete