வையக மாந்தர்
வாழ்வின் வழிதனில்
வாழும் பொழுதினில்
விரக்தியில் புலம்பா
வேளையும் உண்டோ?
வியப்பில், அதிர்வில்
விடியாத் துண்பத்தில்
விதி வசமேன்றே
வீழ்ந்து அழாத
உள்ளமும் உண்டோ?
பிறந்தது முதலே
பிரியா வார்த்தையாய்
உடன் வரும் விதியின்
விதிதான் என்ன?
எது விதி என்றே
என் மனம் அலசிட
எத்தனை முயற்சி
எடுத்தும் அறியா
என் செயல் கூட
என் எதிர் நின்று
சிரிக்கும் விதியோ?
வேண்டாம் என்று நாம்
ஒதுங்கிட முயல்கையில்
விரலைப் பிடித்து
விணையாய் தொடரும்
ஒட்டி உறவாடும்
வேண்டா விருப்பின்
பெயர்தான் விதியோ?
காலையில் எழுந்ததும்
கண்களை மூடி
கடவுளை வேண்டி
காரியம் தொடங்கையில்
கடந்தது பூணை
காரியம் கெட்டதே
எனக் கண் மூடிக்
கலங்குதல் விதியோ?
குறிகள் பார்ப்பதும்
கண்டம் பார்ப்பதும்
குனியாத் தலையில்
குட்டுப் படுவதும்
கண்கள் பதியாப்
பாதையில் இடர்வதும்
குங்குமம் விழுவதும்
விதவையைக் காண்பதும்
பல்லியின் சொல்லில்
பலன்கள் பார்ப்பதும்
அறிவியல் விதியோ?
அறியாமையின் விதியோ?
மனிதர் ஓர்குலம்
மனங்கள் ஒன்றென
மதியின் ஆய்வில்
மனிதன் செல்லா
மடமை விதியோ?
வண்ணத் தோல்கள்
வாய்க்கப் பெற்றோம்
வண்ணப் பிரிவினை
ஏய்க்கப் பெற்றோம்
சாதிகள் குலங்கள்
உயர்ந்தவன் தாழ்ந்தவன்
வையம் பெற்றதும்
உலகம் மடமையில்
உழலும் விதியோ?
வேண்டிய விருப்பங்கள்
வேண்டா விழைவுகள்
நடப்பின் தவறுகள்
எண்ணாச் சிறுமை
நமக்குள் வந்த
நிகழ்வும் விதியோ?
நல்லது நடப்பின்
மகிழ்வது நடப்பு
நல்லது நடந்ததை
மறப்பதும் நடப்பு....
இது நல்விதிஎன
இதயம் சொல்லாமல்
இழப்பை மட்டும்
இழிவாய் சொல்லும்
இதுதான் மாந்தர்
இயல்பு விதியோ?
மனிதனின் விதியை
மனிதன் அறிந்திட
மறுக்கும் கிறுக்கு
மடமை விதியோ?
விதியைத் தேடி
வீதி வீதியாய்
விதி விதியென்று
விதியாய் அலைந்தும்
விதியின் வினோதம்
அறிகிலேன் நண்பா
விதியின் அர்த்தம்
சொல்வாயோ நண்பா?
No comments:
Post a Comment