கவிதை ஒன்று.
கவியான அவளே
கவி கேட்ட பொது
கவிதைக்கு வெட்கம்
கண்மூடிக் கொண்டது!
காணாத விழிகளிலே
கற்பனையாய் ஒளிரும்
கவி சொன்னாள்; மின்னல்
கவி செய்த பார்வையென
கவின் பாடும் பாசக்
கவிமொழியும் அவளானாள்
கவிழ் வானச் சூரியனின்
கட்டழகுக் கலை போலே
கவிதேடும் இதயத்தில்
கண்முன்னே ஓவியமாய்
கவி சொல்வாய் என்றவளே
கவித் தருவாய் நின்றாள்
கவிச் சொல்லாய் நெஞ்சினுள்ளே
கவி பொழிந் தாள்; வென்றாள்
மதியானாள்; மதிஎண்ணும்
நினைவுகளின் நதியானாள்.
புலர்கின்ற பொழுதெல்லாம்
புதிதான ஒளியானாள்....
காலங்கள் கொண்டுவரும்
காணாச் சுழற்சியிலே
வருவதும் போவதும்
காலவிதி யெனச்சொன்னால்
காலத்தால் மாறாத
கருவாக நிற்கும்
கவி அன்புப் பவித்திரமாய்
கவியோடு வாழ்வாள்
கவியன்று எனையே
கவி பாடக் கேட்டாள்
கவி சொல்லும் கவியாய்
கவித்துவமப் பவியாய்
கவியானாள் ....
என் கவியானாள்....
No comments:
Post a Comment