Wednesday, February 17, 2010

நீ....

மனம் என்ற கோயிலின்
மறைந்த சுவர்களிலே
எழுதிய மந்திரம் நீ...

நான் சொல்லாமல்
தானே எழுதிய
அகத்தின் அர்த்தமாய்

தானே முடுக்கி
தானே இயங்கும்
தான்தோன்றியாய்
உளறும் வார்த்தைகளில்
தாரக மந்திரமாய்
நீ....

ஒரு உயிரின்
இயக்கமாய்
இதயம் துடிக்க
இதயத்தின் உயிராய் நீ....

மாயம் எண்ணி
வியக்கும் சிறுபிள்ளை போல்
சுற்றிச் சுற்றி
உன்னைத் தேடும்
ஓயாத ஓட்டத்தின்
காலடித் தடங்களும் நீ....

காதல் இதயத்தின்
கண்களானாய்!
இமைகளின் இருளில்
இதயத் துடிப்பில்
அருகில் எனக்குள்
ஆனாலும்
கானல் போல் நீ....

இருந்தாலும் மூழ்கிவிட்டேன்.
சொல்லாத சுகமாக
எனக்குள்
கடல் போல் நீ.....

என் பயணத்தின்
ஒவ்வொரு நொடியும்
நீ.....

காதலின் தூரமும் நீ.
காதலின் அருகும் நீ.
அணைத்தும்
நீ...நீ...நீ.....

No comments:

Post a Comment