Thursday, October 21, 2010

கோட்பாடு...

இரவின் நீண்ட தூரம் போல்
என்னைத் தேடிய பயணம்...

இதயத்தில் சுவர்களில்லா
பரிதவிப்பு....

என்னை மூடிக் கொள்ள
இருளே சுவரானது...

சொல்லாத வார்த்தைகள்
இருளில் எழுதிய சுவடியாய்
பெயரில்லாமல்
மறையும் மறையானது...

இருளைத் திறந்து
பார்க்கும் விழிகள்
இறைவனுக்கு உண்டு

இறைவனைப் பார்க்கும்
விழிகள் இருளில் உண்டு!

பாதையில்லாமல்
செல்லும் பயணத்தில்
ஒலித்த வேதம் போல்

என் சிதிலங்களில்
என்னுள்
என்
எண்ணக் கோட்பாடு

என் இருளறையில்
இறையருள்....

என் மந்திரங்கள்
என்னோடு!

இதுவே
என் கோயில்
கோட்பாடு...

No comments:

Post a Comment