Sunday, October 3, 2010

வாசகன்...

ஒரு புத்தகம்...

வாசிக்க முயன்றேன்
அர்த்தம் புரியவில்லை

யாரோ எழுதிய எழுத்துக்கள்
என்று விட்டுவிட
முடியவில்லை

முகவுரை
பொருளுரை
முடிவுரை
இல்லாமல்...

இந்தப் புத்தகம்....
இன்னும் திறந்திருக்க

முயன்ற பொழுதுகளில்
பதித்த முத்திரை
கிழிந்த பக்கங்களாய்...

இரவும் பகலும்
தெரியாத எழுத்துக்களில்

ஒன்றும் புரியாமல்....

என் புத்தகம்...
நானே வாசகன்!

No comments:

Post a Comment