Friday, October 8, 2010

வானம்

என் இமைகளுக்குள்
கண்ட வானம்
எனதருகே....

எனைச்சுற்றி
ஒரு சோலை,
என் வானில்
சில பறவைகள்...
சுற்றிச் சுற்றி

நான்
ஒரு பூமியா?
இல்லை வானமா?

என் நினவுகள்
எனையறியாமல்
ஜாலம் செய்ய

விளைவுகளாய்
விண்மீன்கள்

விதிகளில்லாமல்
விஸ்தாரமாய்

மூடிய வானமாய்
வெளிச்சம் தேடி....
செய்த தவம்

என் வாழ்க்கையின்
சுவர்களில்...

என்னையறியாமல்
விளம்பரம் செய்திருந்தது

என் வானம் எங்கே?
என்று....

கண்ணுக்கெட்டிய
தூரம் வரை
என் இமைகள்...
என்னை மறைத்தது...
என்னை மறித்தது!

No comments:

Post a Comment