Wednesday, May 13, 2015

ஒன்று - ஒன்று = 0



எந்திர வாழ்வு.
எதற்காகவோ
ஓடிக் கொண்டிருந்தேன்....
எதையோ
தேடிகொண்டிருந்தேன்

தேடியதொன்று
கிடைத்ததொன்று....


என்னுடன் ஓடிய
பயணிகளும்
என்னைப் போல்
எதையோ
தேடிக்  கொண்டிருந்தனர்

யாரென்று தெரிந்தவரும்
யாரென்று தெரியாதவரும்
அங்குமிங்குமாய்
ஓட்டம்....

திடீரென்று
திரைப்படத்தில் வரும்
மெ துவேகக் காட்சி போல்
எனது வேகம்
குறைந்து விட

என்னை விட்டு
நான் சென்றேன்...

அழுகையும்
கூக்குரலும்....
அருகாமை சொந்தங்கள்
நட்புகள்

மெல்லப் பறந்தேன்
உருவம் விட்டு
அருவமாய்....

எந்திரம்...
ஓட்டம் விட்ட போது...

எனது சேமிப்பும்
எனது கணக்குகளும்
பூச்சியத்தில்
தொடங்கி
பூச்சியத்திலேயே
முடிந்தது

ஒன்றை விட்டு
ஒன்று போனால்
பூச்சியம்தானே...

வாழ்க்கையின் கணக்கும்
பெரிதல்ல
ஆனாலும் பூச்சியம் புரியாமல்....

எந்திரங்கள்...
ஓட்டங்கள்...
கணக்குகள்....

No comments:

Post a Comment