Thursday, February 17, 2011

நான் என்ற குறும்படம்....

கேள்வி போல்
வளைந்த வாழ்க்கை...
பதில் தெரியாமல்!

எண்ணும் எழுத்தும்
கண்ணை மறைத்தன.

மனித ஜீவியாய்
ஒரு மாயம்....

என் சித்திரம் சிரித்தது.
கண்ணாடியாய்
என்னையே
எதிரில் கண்டேன்.

என்றோ சொன்ன
எதிர்கால வாக்காய்
என் சோதிடத்தை
எழுதிய என்னை

வெற்றிடம் நிரப்பிய
காற்றாய்
கிரகித்தேன்.

முக்காலமும்
உணர்ந்தேன்...
என் மூச்சின்
முகவரியில்.

நாடகங்கள் மேடையில்
மட்டுமல்ல
ஒவ்வொரு
நொடியும் நடிக்கும்
நான்

ஒத்திகை இல்லாமல்
ஒரு உலகம் படைத்தேன்

என் வாழ்க்கை
என்ற குறும்படம்
யாரும் காணாத
படச்சுருளாய்


கல்லறைப் பெட்டியில்...

4 comments:

  1. உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன்
    நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.

    http://blogintamil.blogspot.com/2011/06/2.html

    ReplyDelete
  2. மிக்க நன்றி. அவசியம் பார்த்து விட்டு உங்களைத் தொடர்பு கொள்கிறேன்.

    அன்புடன்
    முகில்

    ReplyDelete
  3. தமிழ்ப் பைங்கிளிக்கு நன்றி. உங்கள் படைப்புகளை விரைவில் கண்டு எழுதுகிறேன். வாழ்த்துக்களுடன்...

    முகில்

    ReplyDelete