Sunday, January 2, 2011

நானாய்...

வரையரை இல்லாத
வானத்தில்
வரைந்த
கற்பனை ஓவியம் போல்....

எண்ணக் கோட்டைகளின்
சாளரங்களில்
என் வித்யா சரணங்கள்

உள்ளும் வெளியும்
ஒன்றுமில்லாமல்
உரைந்த
மணித்துளிகளில்

கிழிந்த குடையாய்
என் இதயம்....

ஒழுகிய நிதர்சனம்
ஒட்டாமல் நான்

கற்பனையா?
கனவா?
கட்டாந்தரையா?

என் சடலத்தின் மேல்
விளைந்த புல்லை
எமனின் வாகனம் புசித்தது.

எல்லாம் நானே....
என் முகவரி தேடி
யாரும் அலையவில்லை

என்னைத் தேடிய
பொழுதுகளில்...
நானாய்...

எனக்கு நானே எமனாய்....

என் சரித்திரம்
சரிந்தது.

1 comment:

  1. ungal kavithaigali adikkadi eman,kallarai,maranam enbathaip parkiren.ethai serthu vaitthalum eruthil maranam than enpathai ninaivupadutthukirathu.

    ReplyDelete