Wednesday, August 25, 2010

பிரிவோபசாரம்...

பயணம்...

திடிரென ஏற்பட்ட
பொழுது போல்...

அறியாமல் வந்தமர்ந்த
சக பயணியின்
அனுமானங்களில்

அனுமதிச்சீட்டு
பெறாமல்
அங்குலங்கள் நகர எத்தனிக்கும்
அடையாளங்கள்

உயிரின் உரசல்கள்
உள்ளத்தின் அறியாமை
சித்திரங்கள் தீட்டிய
சில மௌனத் தூரிகைகள்

சிறகை விரிக்க முயன்ற
சிறு பறவை போல்
எனது வாழ்வின் அத்தியாயம்
கனவில் எழுதப்பட்டது...

நேர்கோடுகள்
நேர்கோடுகளால்
வளைந்தன...

பயணத்தின் பாதை
ஏதோ ஒரு இணைவில்
யதார்த்தம் என்ற
பூச்சில்
வழுக்கியது.

என்னைப் பிரிந்தேன்.

ஒவ்வொரு பிரிவிலும்
உள்ள அர்த்தங்களின்
உரையாடலில்

சொல்லாத உணர்வுகளும்
எழுதாத எழுத்துக்களும்
ஊமை மொழியாய்

அந்தரங்க விசும்பல்களுடன்
என்
பிரிவோபசாரம்....

என்னை நான் பிரிந்தேன்
கேட்காத செவிகளுடன்
பேசாத வாயுடன்
மௌனத்தில் தொடங்கி
மௌனத்தில் முடிந்தேன்....

No comments:

Post a Comment