Saturday, August 7, 2010

சொல்லாமல்...

மௌனம் மன்றாடியது.

இதயத்தின்
சிறு வானத்தில்
ஊமைப் பறவையின்
உணர்வுகள் போல்

சொல்ல விரும்பிய
சுகங்களா?
சொல்ல வராத
சோகங்களா?

மனதின் அறையில்
மோதிய எதிரொலிகள்

வறண்ட பூமியில்
வராத மழையின்
ஊழிக் காற்றும்
மின்னலும் இடியும்
எங்கோ கேட்கும்
சப்தம் போல்...

வானம் பார்த்தேன்...

என் இதயத்திற்குள்
எனக்குத் தெரியாத
எல்லைகளா?

ஏக்கத்தின் மைற்கற்களைக்
கடந்த தூரங்கள்...

மனதின் சாலைகளில்
வருவதும் போவதுமாய்

எங்கு தொடங்கினேன்

எங்கு முடியும் என்று
சொல்லாமல்....

No comments:

Post a Comment