Tuesday, June 22, 2010

பித்தனா? புத்தனா?

உறைந்து போன
சமயத்தின் சமாதானம் போல்
ஒரு
நொடியின் சனனம்....

என் எதிர்கால முன்னுரையாய்...
எதுவரை போகும் என்று
தெரியாத பாதையாய்
விரிந்த விதியின்
புரியாத வீதியாய்,

யாரோ இட்ட பிச்சையில்
என் முறுவல்கள்
என் அழுகைகள்
என் தேடல்கள்
என் தொலைவுகள்

வாழ்க்கை என்ற
விளையாட்டின்
நடுவரில்லா
தீர்மானங்கள்!

தொடக்கங்களின்
முடிவாய்
முடிவின்
தொடக்கங்களாய்....

ஜெயித்ததும்
தோற்றதும்
ஒரு பரிமாற்றம் போல்

நான்
அமைதியாய்

ஒரு அசைவற்ற
சடலமாய்....

அகங்காரம்
என்ற புள்ளியை
அறிய மேற்கொண்ட
அறியாமைப் பயணத்தின்

அடிச்சுவடுகளில்...
நான்....
யார் செய்த வியாபாரம்?

என் கேள்வியின்
இத்யாதிகள்
புரியாத செவிகள்....

ஒரு புறம் பித்தனாய்
மறுபுறம் புத்தனாய்...

No comments:

Post a Comment