Sunday, May 9, 2010

முகம்

நேசம் இணைய
இரு உள்ளங்கள்
உருவாக்கும்
உயிரெழுத்தின்
முதல் வரியாய்

ஒரு காலகட்டத்தின்
முகவரியாய்....

பிறந்த அழுகையொலி
பல உள்ளங்களின்
சிரிப்பின் அர்த்தமாய்

முகம்!

பரந்து கிடக்கும் பூகோளத்தில்
பலகோடி உயிர்களின்
தனித்துவமாய்....

மனக் கண்ணாடியின்
ஒவியமாய்

எத்தனையோ உணர்வுகளின்
எழுத்துப் பிரதி போல்
தெரியாத உறவுகளின்
பாலமாய்...

முகம் பார்க்க
வரும் சுகம்
உள்ளங்கள் ஏங்கும்.

நட்பாய்,
காதலாய்
அன்பாய்
உறவாய்....
நேற்றைய
இன்றைய
இருப்பின் அடையாளங்களாய்...

முகத்தின் பிம்பங்கள்
உயிரின் சுவடுகளாய்
காதலில் பிறந்து
வாழ்வைத் தொடரும்.

காதலைத் தூண்டும்
உள்ளத்தில் முகமே
கனவினைத் தூண்டும்.

கற்பனை செழிக்க
விருப்பத்தின் முகம்,
பாசத்தின் முகம்,
அன்பின் முகம் என,
வானாய்,
நிலவாய்
சூரியனாய்
நட்சத்திரமாய்
பூக்களாய்
மழையாய்
அலையாய்
முகிலாய்
காற்றாய்
காணுமிடமெல்லாம்
கண்களில் வரும்
உருவகம் ஒரு முகம்.

ஊடல் கொண்டு
மறைந்து நின்றாலும்
உள்ளத்தின் பின்புறம்
ஒளிந்து நிற்கும்
மறையா உருவிலும்
ஒரு முகம்.

அறிமுகம் இல்லாத
இதயப் பரிதவிப்பில்
ஆர்வம் காட்டும்
ஒரு அன்பின் முகம்...
வாழ்க்கையின் வழிதனில்
சோதனை தந்து
வேதனை கொண்டு
பார்க்க விரும்பா
சாபமும் பெறும்
ஒரு முகம்...

முகத்தின் அகம்
அகத்தின் முகம்
இரண்டும் தகும்
முகம் தேடி
சகத்தின் முகமும்
முகத்தில் சகமும்
செல்லுதடி பெண்ணே...

முகம் வெல்லுதடி கண்ணே!
அகம் வெல்லுமோடி கண்ணே?

1 comment:

  1. கடைசி 3 பாரா ரொம்ப நல்லாருக்கு.

    ReplyDelete