Friday, March 12, 2010

நான் வானம்...நீ பறவை

என் மௌனத்தின்
உதிரல்களில்
விளைந்த பூக்களாய்
வானம் பார்த்தாய்...

உன் பார்வை
என் வானத்தில்
வானவில்லின்
வண்ணங்கள் தீட்ட ...

நினைவுச் சூரியனின்
புரவிகளாய்
என் தேரிழுத்தாய்

பலகோடிக் கவிதைகளின்
ஸ்பரிசத்தில்
உனை எழுதாத எழுத்தில்லை.
மொழியில்லை!

கண்கள் பாராத
நுண்ணுயிராய்
என் மண்டலத்தில்
முற்றுகை இட்டாய்.

நினைவுகள் அடிமையாய்...
சுவாசத்தில் நீயில்லா
சுகம் பிடிக்காமல்
என் சுதந்திரம்
உன்னில் குடி கொண்டது!

யுகங்கள் ஓடியும்
சகங்கள் மாறியும்
நீ மட்டும்
வாடாத வாசமாய்
வாழ்கிறாய் எப்படி!

என் ஈசல் வாழ்வினில்
உன் வசப் பட்டேன்
என்ற ஒரு நினைவே
சாபல்யங்களாய்

மௌனத்தின் சலனங்களாய்
நீ சிறகடிக்கிறாய்...
என் வானம் உனக்காக
விரிந்து கிடக்கிறது!

No comments:

Post a Comment