Saturday, March 6, 2010

காதல்...


காதல்!

உயிரின் ஸ்வரம் மீட்டி
உணர்வின் இசையாய்

வாழ்க்கை வனத்தின்
வசந்த வனப்பாய்

சொல்லாமல் குடிபுகுந்த
சுயத்தின் சுகமாய்

அன்பாய் அகத்தில்
அறிந்திடும் அழகாய்

இலக்கியம் அறியாமல்

இதயம் எழுதும்
இனிய கவிதையாய்


உன்னால்....
காதல்!

நிழல் கூட வியந்தது 
வெளிச்சம் இல்லையென்றால்
உன்னைத் தொடர முடியாதென்று....
நானோ
இரவு பகல்
வெயில் மழை என்று
உன்னைத்  தொடராத
பொழுதுகளே இல்லை...

காதலின் வெளிச்சத்தில்
உன்னை என்
இதயத்தில் உயிராய் தொடர்கிறேன்...
சூரியன் வாராத  நாளுண்டு
சந்திரன் இல்லாத நாளுண்டு
உன்னை  எண்ணாமல்
நானுண்டோ?
நின் நினைவுகள் நீங்கிய
நொடியுண்டோ?

இச்சென்மம் விழி மூடும்
என் காதல் விழி திறக்கும்
மறைகின்ற நொடிதனிலும்
உன் நினைவில் உயிர் பெறுவேன் 
மறுபடியும் பிறப்பேன்
மறைவின்றி வாழ்வேன்

இப்பிறவி எனக்களித்த
இறைவனது அருள் போலே
காதலுனை எண்ணியே
காற்றினிலே கலப்பேன்....
என் வானின் திசை யாவும்
உன்னோடு பறப்பேன்...

No comments:

Post a Comment