Friday, June 26, 2009

முட்பதர்....

சோலையின் ஓரத்தில்
முட்செடி போல்
விரும்பாத உயிராய்
வீணாகும் எனக்கு...

சுகங்களின் வேஷத்தில்
சோகமாய் அழுதிடும்
கண்கட்டி வித்தையை
கற்பித்தாய் அம்மா

இருள் அகன்று
ஒளி வரும்
என்று காத்த யுகங்களை
கண்களிலே பூத்திருக்கும்
கரையான் புற்றுகளாய்
கவலைக் காளான்களாய்

மரபின் சுழற்சியிலே
சுவாசம் அழன்றது
மதியின் அயர்ச்சியிலே
மழழை ஆனது...

நான் எங்கோ
ஏங்கி நிற்கும்
உருவமில்லாத் தனிமரமாய்

பக்கத்தில் வருவதற்கு
காற்றும் பயப்படும்
என் முட்களில்
சிக்கி மூர்ச்சையாகிடும்

என் கனவுகளை
சுமந்த உன் மூச்சில்
கல்லறை கவிதையாய்
மறைகின்றேன் அம்மா...

என் தோற்றமும்
மறைவும்
நான் மட்டும்
அறிந்து கொள்ளும்
விசித்திரம் அம்மா.....

No comments:

Post a Comment